கரூர்-கோவை சாலையில் உள்ள விசாகா நகர் செல்லும் வழியின் முன்பு சாலையின் ஓரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் அப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.