கடும் துர்நாற்றம்

Update: 2023-06-21 09:11 GMT

கோத்தகிரி குன்னூர் சாலையில் பெட்டட்டி சுங்கம் அருகே உள்ள முள்ளை நகரில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. அவை அங்குள்ள கோவில் அருகே அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்