குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-14 17:47 GMT

ஈரோடு அருகே கவுண்டச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள அத்தப்பம்பாளையம் பாலம் அருகே திண்டல் ரிங் ரோடு நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் வாகனத்தில் ஏற்றி வந்து மனித கழிவுகள் கொட்டும் அவலம் நடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்