சுகாதார கேடு

Update: 2023-06-14 17:17 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி தாலுகா பெருமாம்கவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்