குப்பைகளால் பாதிப்பு

Update: 2023-06-07 16:16 GMT
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொது கழிப்பிடம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பைகளும் அதில் கொட்டப்படுவதால் அவை காற்றில் பறந்து ஆற்றுக்குள் விழுகிறது. இதனால், மண்வளமும், நீர்வளமும் பாதிக்கப்பட்டு நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்