கழிவுகளால் மாணவர்கள் அவதி

Update: 2023-06-04 14:04 GMT

அந்தியூர் ஓடைப்பள்ளம் அருகே உள்ள சிந்தகவுண்டன்பாளையத்தில் இருந்து பருவாச்சி செல்லும் சாலையில் மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. சுவாச கோளாறு போன்ற உபாதைகளால் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்