குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-05-31 15:17 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் மாநகராட்சி அலுவலர்கள் குடியிருப்பு பின்புற பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்தும், ரோட்டில் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கொட்டப்பட்ட குப்பைகளை அள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும் செய்திகள்