குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-28 14:33 GMT


தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை காவிரி நகர் தெற்கு நான்காவது தெருவில் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் மற்ற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை இங்கு கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாஞ்சிக்கோட்டை

மேலும் செய்திகள்