குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2023-05-28 14:32 GMT


தஞ்சை-நாகை சாலை ராஜீவ்நகரில் ஏராளமனோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டி எதுவும் இல்லாததால் தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்