குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-28 14:16 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீ அன்னம் பெருமாள் கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்திருத்தலத்தின் வலது புறத்தில் சுமார் நான்கு டிப்பரில் குப்பைகள் கொட்டி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்