குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-05-28 09:38 GMT

திருப்பூர் கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து காசிபாளையம் செல்லும் வழியில் குப்பை மாத கணக்கில் குவிந்து கிடக்கிறது. அங்கு கூட்டமாக நாய்களும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நாய்கள் சாலையின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. இதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்