குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-05-24 14:07 GMT

மணமேல்குடியில் பெரிய குளமாக மஞ்சள் குளம் உள்ளது. இந்த குளத்தில் கிழக்கு புறமாக உள்ள கரையோரத்தில் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் குப்பைகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். இங்கு கொட்டப்படும் கழிவுகள் மஞ்சள்குளம் தண்ணீரில் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தினசரி ஏராளமானோர் குளிக்கும் இந்த குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்றி, இங்கு குப்பைகளை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்