குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-24 10:04 GMT

கோவை மாநகராட்சி 38-வது வார்டு பொம்மனம்பாளையம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அங்கு குப்பை தொட்டி உள்ளது. ஆனாலும் குப்பைகள் வெளியே கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை சாலை வரை இழுத்து போட்டுவிடுகின்றன. இதனால் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றவும், தொட்டியில் குப்பைகளை கொட்டவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்