குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-21 12:21 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் பின்புறத்தில் முடிகொண்டான் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்