குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-21 12:03 GMT

திருவாரூர் மன்னார்குடி சாலை விளமல் பகுதியில் உள்ள இ.பி.நகர், சீனிவாசன் நகரில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிகின்றன. குவிந்து கிடக்கம் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்