சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகழிவுகள்

Update: 2022-07-22 15:28 GMT

உப்பள்ளி டவுன் ஸ்ரீ சிதாரோடர் சுவாமி ரெயில்வே நிலையத்தின் மூன்றாவது நுழைவாயில் பகுதி அருகே மன்டூர் ரோடு அம்பேத்கர் காலனி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகே நீண்ட நாட்களாக குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் மலை போல் குப்பைகழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும், அந்த குப்பைகளை பன்றி, நாய் போன்றவை சாலையில் சிதறிவிடுகின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே அந்த குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்