குப்பை அகற்றப்பட்டது

Update: 2023-05-17 06:35 GMT

குப்பை அகற்றப்பட்டது

நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளை மாசானமுத்து கோவிலின் முன்புறம் உள்ள தெருவில் சிலர் குப்பைகளை கொட்டினர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் குப்பை உடனடியாக அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கார்த்திக், கோட்டார்.85084 06120(படம் உண்டு)

மேலும் செய்திகள்