கழிவுகள் அகற்றப்பட்டது

Update: 2023-05-10 09:12 GMT

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள அட்டைக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஓட்டல் கழிவுகள் கொண்டப்பட்டு காணப்பட்டது. இதனால், துர்நாற்றம் வீசி அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-ராஜன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்