குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-07 14:51 GMT

சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மன் கோவில் கைகாட்டியில் உள்ள குளத்தின் முகப்பு வாசலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகளும் தேங்கி காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகள், தபால் நிலையம் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்