சுகாதார சீர்கேடு

Update: 2023-05-07 07:17 GMT
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் அருகே அட்டக்குளத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சில ஓட்டல்களின் கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓட்டல் கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்