குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-03 16:46 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, தங்கநகர், குண்டக்கல் பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பைகள் அப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் ஓரத்திலுள்ள வனத்துறையினருக்கு சொந்தமான பகுதிகளில் கொட்டப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீருடன் குப்பைகளும் சேர்ந்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்