குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-03 09:19 GMT

கோவை கருமத்தம்பட்டியில் சாலைேயாரத்தல் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் அதனருகில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர குப்பைகளை தெருநாய்கள் சாலை வரை இழுத்து போட்டுவிட்டு செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்