விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.