சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-04-26 13:50 GMT

கரூர்-ஈரோடு சாலையில் வடிவேல் நகர் உள்ளது. இந்த வடிவேல் நகர் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளன. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்