குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-04-26 09:23 GMT

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்