குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2022-07-21 17:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களால் நகர் முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அதனை வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த நிலையில் பணியாளர்கள் குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்