நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-04-23 11:53 GMT

சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புகழூர் பிரிவு சாலை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் பாலத்துறை பகுதிகளில் செயல்பட்டு வரும் வாத்து, கறிக்கோழி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து போட்டுச்செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் வீட்டு இடிபாடு கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்