குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-04-19 17:33 GMT
விழுப்புரம் மகாராஜபுரம் இ.பி. காலனி பகுதியில் கோலியனூரான் வாய்க்கால் செல்கிறது. இதன் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் பன்றிகள் மேய்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்