அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-04-19 16:05 GMT

அரியலூர் மாவட்டம், எடத்துக்காரன்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்