சுகாதார சீர்கேடு
தாராபுரம் டவுன் 2-வது வார்டு நாடார்தெரு புதூர் மெயின்ரோட்டில் வீடுகளின் ஓரமாக மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அவற்றில் செடி முளைத்து உள்ளது.
மேலும் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர் கேடுகள், புழு, பூச்சி, விஷ ஜந்துக்கள் வீட்டிற்கு உள்ளே வருகிறது. புகார் தெரிவித்தும் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஸ்வரி, கோவிந்தராஜ்.9360523485