புகைமூட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு

Update: 2023-04-16 14:49 GMT

சித்தோடு பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தைகடை மேடு யூசுப் நகர் 4-வது வார்டு பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இந்த குப்பைகள் அந்த பகுதியில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் புகைமூட்டமாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை எரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்