கிணற்றை மூட வேண்டியது அவசியம்

Update: 2023-04-05 17:46 GMT
வேப்பூர் தாலுகா ம.புதூர் கிராமம் நூலகம் அருகே கிணறு உள்ளது. இந்த கிணறு பயன்பாடின்றி காணப்படுவதால், அப்பகுதி மக்கள் அதில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கிணறு திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகள் அதில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி கிணற்றை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்