குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2023-04-05 13:47 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதி ஊராட்சியை சேர்ந்த சுக்கிரன்விடுதி கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருவோணம் சாலையில் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் இருந்து சாப்பிட்ட இலைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் இந்த குப்பை கழிவுகளால் சுகாதாரக்கேடு உருவாகி கிராம மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் மண்டப கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்