சுற்றுசூழல் பாதிப்பு

Update: 2023-03-26 16:26 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரம் ஒரு சாயப்பட்டறை உள்ளது. இந்த சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் ஆற்று நீர் மாசடைகிறது. மேலும் சுற்றுசூழலுக்கும் பாதிப்படைகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்