குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா?

Update: 2023-03-22 11:57 GMT


நாகை நகர் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் செல்லூர் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அருகில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்