குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-19 14:33 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொட்டப்படும் குப்பைகளால் நீர் மாசு ஏற்படுகிறது. மேலும், குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

மேலும் செய்திகள்