தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-19 13:55 GMT

திருவாரூர்-நாகை பைபாஸ் சாலை கிடாரம்கொண்டான் பகுதி மரணப்பாலம் ஓடம்போக்கி ஆற்றுகரையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்