காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள், படப்பை மணிமங்கலம் செல்லும் பகுதியில் குவியிலாக மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குப்பை மலை மேடுகளை முழுமையாக அகற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.