குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்

Update: 2023-03-12 05:55 GMT
கடையம் அருகே வெய்க்காலிபட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அருகில் ரெயில் நிலையம் செல்லும் பாதையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் அதிகளவு சேர்ந்தவுடன் தீ வைத்து எரிப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்