கோவை நெ.24 வீரபாண்டி எஸ்.வி. காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதியில் குப்பைகளை மலைபோல் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.