நோய் பரவும் அபாயம்

Update: 2023-02-26 16:48 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பட்டணம் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மழை காலங்களில் தண்ணீர் வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. ஏரி தண்ணீரில் குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டுப்படுவதால் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரி தண்ணீரில் குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணியன், ராசிபுரம்.

மேலும் செய்திகள்