குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா ?

Update: 2023-02-19 17:22 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி எருமப்பட்டியில் இருந்து முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் இரண்டு அரசு மதுபான கடையில் உள்ளன. இங்கு மது பிரியர்கள் அங்கேயே வாங்கி நகர்ந்துவிட்டு அங்கு செல்லும் கால்வாயில் மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ராஜேஷ், எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்