குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-02-08 07:51 GMT

கோவை கீரணத்தம் பகுதியில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்கா செல்லும் சாலையோரத்தில் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு தெருநாய்கள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் முக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்