குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-05 17:53 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ெரயில்வே பாலத்தை கடக்கும் தரைவழி மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களும் குப்பைகள் அதிகமாக தேங்கி இருக்கிறது. திடீரென காற்று அடிக்கும் சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பைகள் காற்றில் பறந்து வந்து விழுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, ராசிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்