செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-05 17:52 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி வியாழக்கிழமை வாரச்சந்தை அருகில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. அதன் உட்புறத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. அதில் விஷபூச்சிகள் தங்கிவிட வாய்ப்புள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அவைகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

-சரசு, காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்