குப்பைத்தொட்டி தேவை

Update: 2023-01-29 15:09 GMT

நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள காரியங்குடி செட்டி தெரு உள்ள காலிமனைகளில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், புதிதாக அங்கு குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்