குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-29 11:26 GMT

திருவாரூர்-மன்னார்குடி சாலை விளமல் கூட்டுறவு நகராட்சி அருகே பாரிநகர் செல்லும் பாதையில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வப்போது குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதன்காரணமாக வெளிவரும் புகையினால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்