கொட்டிக்கிடக்கும் காய்கறி கழிவுகள்

Update: 2023-01-25 18:08 GMT
சங்கராபுரம் பஸ் நிலைய நுழைவுவாயில் அருகே உள்ள சிறுபாலத்தில் காய்கறி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் கழிவுகளில் வழுக்கி வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. எனவே கொட்டிக்கிடக்கும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்