குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-25 12:27 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி நடையனூரில் சாலையோரம் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களை நியமித்து குப்பைகளை வாங்கி வந்தனர். தற்போது தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள தெருக்களில் வாங்கும் குப்பைகளை குப்பை தொட்டி அருகில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்