கடும் துர்நாற்றம்

Update: 2023-01-25 10:33 GMT

கோவை உக்கடம் ஜி.எம். நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் அருகே வடமாநில தொழிலாளர்கள் சிலர் தினமும் அதிகளவில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்